அவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் வெளிவிவகார அமைச்சுக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
இரு நாடுகளின் நீண்ட கால நட்புறவை வலுப்படுத்தி இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
அதன்பின்னர் ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தார்.
புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
The post இலங்கையில் ஜெய்சங்கர்! appeared first on Vanakkam London.