• Fri. Mar 21st, 2025

24×7 Live News

Apdin News

இலங்கையில் தலைமறைவாக இருந்தபோலீஸ் மாஅதிபர் சரண் – பிரபாகரனை தேடுவதை போன்று தேடினோம்

Byadmin

Mar 21, 2025


இலங்கை

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு, போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன்

தலைமறைவாகி வாழ்ந்து வந்த போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, சுமார் 20 நாட்கள் தலைமறைவாகியிருந்த இலங்கை போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 19) சரணடைந்தார்.

தனது வழக்கறிஞர்களுடன் நேற்று காலை 8 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இவ்வாறு சரணடைந்த தேசபந்து தென்னக்கோனிற்கு பிணை வழங்குமாறு, அவரது வழக்கறிஞர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பிணை வழங்குவது தொடர்பான தீர்மானம் இன்றைய தினம் (மார்ச் 20) எட்டப்படும் என நீதவான் நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

By admin