• Tue. Feb 17th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் புதிய வரைவுக்கு எதிர்ப்பு ஏன்?

Byadmin

Feb 17, 2026


இலங்கை, பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பட மூலாதாரம், UGC

இலங்கையின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அடக்குமுறைச் சட்டமாகக் கருதப்படும் 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” (பிஎஸ்டிஏ) எனும் புதிய சட்ட மூலத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது தயார் செய்துள்ளது.

எனினும், இந்த புதிய வரைவு பழைய சட்டத்தை விடவும் அதிக அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்குறுதி மீறப்படுகிறதா?

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது தேர்தல் பரப்புரைகளின் போது ‘அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்போம்’ என உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், புதிய சட்ட மூலம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ‘அனைவருக்கும் நீதி’ என்ற சிவில் சமூகக் கூட்டமைப்பு, அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட மூத்த புத்திஜீவிகள் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில், “இப்புதிய சட்டம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஒடுக்குமுறையையே சட்டப்பூர்வமாக்குகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin