• Fri. Mar 14th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கையில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் – நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள்

Byadmin

Mar 14, 2025


இலங்கை

அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பணிப்புரியும் பெண் மருத்துவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இலங்கையில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது.

போதனா மருத்துவமனை
படக்குறிப்பு, அநுராதபுரம் போதனா மருத்துவமனை

நடந்தது என்ன?

அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மார்ச் 10 ஆம் தேதி இரவு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பெண் மருத்துவர் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இதை செய்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

By admin