• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கையில் 1000 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து – 15 பேர் உயிரிழப்பு

Byadmin

Sep 5, 2025


இலங்கை, பேருந்து விபத்து, மீட்புப் பணி, விபத்து, பயணம்

பட மூலாதாரம், G.KRISHANTHAN

படக்குறிப்பு,

இலங்கையின் பதுளை – எல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றைய தினம் (04) இரவு 09 மணியளவில் இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உள்ளடங்களாக முப்பதிற்கும் அதிகமானோர் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும், 9 பெண்களும் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

By admin