• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? – ராணுவ வெற்றி விழாவில் இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்?

Byadmin

May 21, 2025


இலங்கை உள்நாட்டு போர், அநுர குமார திஸாநாயக்க, இலங்கை, தெற்காசியா, விடுதலைப் புலிகள், ஈழம்

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி நிகழ்வு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

இவ்வாறு நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும், ஜனாதிபதித் தலைமையில் நடைபெறுகின்ற நிலையில், இம்முறை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறும் என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண கடந்த 16ம் தேதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

By admin