• Thu. Mar 6th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?

Byadmin

Mar 5, 2025


இலங்கை, வாள்வெட்டு, துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

பட மூலாதாரம், Special Arrangement

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில், நாட்டின் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

”கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விடயம் தொடர்பான தரவுகளை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்றே தற்போதைக்குக் கூற முடியும்’ என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

By admin