• Tue. Jun 3rd, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர்களுக்கு போட்டி அதிகாரிகள் நியமிப்பு

Byadmin

May 29, 2025


இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நடைபெறவுள்ள மூன்று வகை கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு போட்டி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூவகை தொடர்களுக்குமான போட்டி தீர்ப்பாளராக (Match Referee) ஐசிசியின் உயர் அடுக்கு தீர்ப்பாளர்களில் ஒருவரான ஸிம்பாப்வேயின் அண்டி பைக்ரொவ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஐசிசி உயர் அடுக்கு மத்தியஸ்தர்களான ரொட் டக்கர், அலெக்ஸ் வார்வ், அலாஹுதின் பாலேக்கர் ஆகியோர் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

ஐசிசியின் சர்வதேச மத்தியஸ்தர்கள் குழாத்தில் இடம்பெறும் இலங்கையின் ரூச்சிர பல்லியகுரு, ரவீந்த்ர விமலசிறி, லிண்டன் ஹனிபல், ப்ரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முழு டெஸ்ட் தொடருக்கும் மத்தியஸ்தராக ரொட் டக்கர் கடமையாற்றுவார்.

டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு அலெக்ஸ் வார்வ், அலாஹுதின்  பாலேக்கர்   ஆகிய இருவரும் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூவகை தொடர்களுக்கும் மத்தியஸ்தர்களாக ரவீந்த்ர விமலசிறி, ப்ரகீத் ரம்புக்வெல்ல ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச ரி 20 தொடர்களுக்கு ருச்சிர பல்லியகுரு, லிண்டன் ஹனிபல் ஆகிய இருவரும் மத்திஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

By admin