• Sat. Feb 22nd, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே கொலை செய்த நபர் யார்? என்ன நடந்தது?

Byadmin

Feb 21, 2025


ஒரு புத்தகத்தின் உள்ளே ஓட்டை போட்டு அந்த கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்துள்ள ஒரு பெண், அதை துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு வழங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெண் இன்னும் தலைமறைவாக உள்ளார் என அறியப்படுகின்றது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதிவாதியை சுடப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒரு புத்தகத்துக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது

குற்றப் பின்னணி உள்ள சட்டவிரோத கும்பல் ஒன்றின் தலைவர், இலங்கையில் நீதிமன்றத்தின் உள்ளேயே, வழக்கறிஞர் வேடமிட்ட ஒரு நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை அளித்த தகவலின்படி, தாக்குதல் நடத்திய நபர் ஒரு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு புத்தகத்தின் உள்ளே துளையிட்டு அந்த கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ள ஒரு பெண், அதைத் துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு வழங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெண் இன்னும் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுகிறது.

சட்டவிரோத கும்பலின் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்னே, வழக்கு விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் அவர் பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகத்திற்குரிய நபராக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

By admin