• Fri. Dec 5th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை: ‘2026 ஜனவரி வரை நிச்சயமற்ற சூழல் தொடரும்’ – எச்சரிக்கும் புவியியல் நிபுணர்

Byadmin

Dec 5, 2025


இலங்கை: 'ஜனவரி வரை நிச்சயமற்ற சூழல் தொடரும்' – எச்சரிக்கும் புவியியல் நிபுணர்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் 2026 ஜனவரி வரை மழையுடன் கூடிய வானிலை தொடரும் நிலைமை காணப்படுகின்றமையால், அந்த காலப் பகுதி வரை நிலக் கட்டமைப்பு உறுதியற்ற நிலையைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

இதை, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பிபிசி தமிழுக்கு தொலைபேசியூடாக வழங்கிய பிரத்யே பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த காலப் பகுதிகளில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

திட்வா புயலின்போது நாட்டிற்குக் கிடைத்த அதிகளவிலான மழை காரணமாக மத்திய மலைநாட்டின் நிலக் கட்டமைப்பு உறுதியற்ற நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலப் பரப்பானது, வழமையான நிலைமைக்குத் திரும்பும் சூழல் தற்போதைய காலப் பகுதிக்கு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குப் பின்னரான காலத்திலேயே அது வழமையான நிலைமைக்குத் திரும்பும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

By admin