8
2023ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, இலண்டனில் சில செல்வந்த பகுதிகளில் கறுப்பு நிற மக்கள், வெள்ளை நிற மக்களைவிட 48 மடங்கு அதிகமாக பொலிஸாரால் நிறுத்தி சோதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
152,000 பொலிஸ் பதிவுகளின் ஆய்வில், கறுப்பு நிற மக்களுக்கு சோதனைக்கான காரணங்கள் அபரீதமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
கிங்ஸ் கல்லூரி இலண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபடி, எஸ்ட் ஷீன் (ரிச்ச்மண்ட்) பகுதியில் கறுப்பு மக்கள் வெள்ளை மக்களைவிட 48 மடங்கு அதிகமாக, டுல்விட்ஜ் வில்லேஜ் பகுதியில் 40 மடங்கு, ஹேம்ப்ஸ்டெட் டவுன் பகுதியில் 38 மடங்கு அதிகமாக சோதிக்கப்படுகின்றனர்.
பெப்ரவரி மாதம், இலண்டனில் கறுப்பு மக்கள் வெள்ளை மக்களைவிட 3.4 மடங்கு அதிகமாக நிறுத்தி சோதிக்கப்பட்டதாகவும், தேசிய அளவில் இந்த விகிதம் 4 மடங்கு என்றும் கூறப்பட்டுள்ளது.