• Fri. Sep 19th, 2025

24×7 Live News

Apdin News

இலண்டன் பூங்காவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, பெண் மருத்துவமனையில் அனுமதி

Byadmin

Sep 19, 2025


இலண்டன் பூங்கா ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு 7:06 மணியளவில் ஹாக்னேயில் உள்ள கிளிசோல்ட் பூங்காவில் (Clissold Park) துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் பெருநகர பொலிஸ் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரது உறவினர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலண்டன் விமான ஆம்புலன்ஸ் paramedics-களால் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மாலை நிலவரப்படி, அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்த அடுத்தக்கட்ட தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கி ஒன்று சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஹாக்னி மற்றும் டவர் ஹாம்லெட்ஸ் பகுதி பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான துப்பறியும் கண்காணிப்பாளர் ஆலிவர் ரிச்டர் கூறுகையில், “விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது, இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகக் கருதுகிறோம், பொதுமக்களுக்கு வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

By admin