• Sun. Mar 23rd, 2025

24×7 Live News

Apdin News

இளைஞர்கள் இருவர் சுட்டுப் படுகொலை!

Byadmin

Mar 22, 2025


மாத்தறை – தெவிநுவர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்தத்  துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வான் ஒன்றில் வந்தவர்களால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்தத் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று சிறிது தூரத்துக்குப் பின்னர் குறித்த வானை தீ மூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், எரிந்த நிலையில், வான் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மாத்தறை – தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post இளைஞர்கள் இருவர் சுட்டுப் படுகொலை! appeared first on Vanakkam London.

By admin