• Tue. Jun 3rd, 2025

24×7 Live News

Apdin News

“இழப்புகளை ஒப்புக் கொண்ட இந்தியா, இதனை பாகிஸ்தானும் செய்யுமா?” – முப்படை தலைமைத் தளபதி கூற்று விவாதிக்கப்படுவது ஏன்?

Byadmin

Jun 2, 2025


தலைமைத் தளபதி அனில் செளகான்

பட மூலாதாரம், MOHD RASFAN/AFP via Getty

படக்குறிப்பு, ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார்

அண்மையில் பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் அளித்த பதில் தொடர்பான சர்ச்சைகள் மும்முரமாகிவிட்டன.

இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகானின் கருத்தை பல நிபுணர்கள் விமர்சிக்கின்றனர். அதேவேளையில், சர்வதேச ஊடகங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மீது கேள்விகளை எழுப்பும் சிலர், அவர்கள் ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக கதைகளை உருவாக்குகிறார்கள்’ எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

நிபுணர்களின் ஆமோதிப்பு மற்றும் எதிர்ப்பு ஒருபுறம் என்றால், இந்திய அரசியல் கட்சிகளும் முப்படைத் தலைமைத் தளபதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளன. ஜெனரல் அனில் செளகானின் கருத்துக்களை முன்வைத்து, ஆளும்கட்சியான பாஜகவிற்கு முட்டுக்கடை போட, எதிர்க்கட்சியான காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் சனிக்கிழமை ப்ளூம்பெர்க் டிவி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு இரண்டு தனித்தனி நேர்காணல்களை வழங்கினார்.

By admin