• Tue. Oct 7th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேலை விட்டு வெளியேறுபவர்கள், புதிதாக குடியேறுபவர்களை விட அதிகமாக இருப்பது ஏன்?

Byadmin

Oct 7, 2025


நோஃபர் மற்றும் இயல் அவிடன்
படக்குறிப்பு, நோஃபர் மற்றும் இயல் அவிடன், தங்கள் குடும்பத்துக்கு “வேறு விதமான வாழ்க்கை” வேண்டும் என்பதால் கனடாவுக்கு குடிபெயர்வதாக கூறுகிறார்கள்.

ஓர் இஸ்ரேலிய குடும்பத்துக்கு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலும் அதன்பின் காஸாவில் வெடித்த போரும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அவர்களின் முடிவுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

அதே நேரத்தில், வெளிநாட்டில் வசிக்கும் மற்றொரு யூத குடும்பத்துக்கு, அந்த நிகழ்வுகளும் அதிகரித்த யூத எதிர்ப்பும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தின.

இஸ்ரேல் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, தற்போது நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை, இஸ்ரேலுக்குள் வரும் மக்களை விட அதிகமாக உள்ளது.

மத்திய இஸ்ரேலின் ரம்லா நகரத்தில், நோஃபர் மற்றும் இயல் அவிடன் தம்பதியரின் 15வது மாடி குடியிருப்பில், அவர்களின் பொருட்களை பெரிய அட்டைப்பெட்டிகளில் ஒரு நிறுவனம் அடைக்கிறது. அந்த பெட்டிகளில் “ஒட்டாவா, கனடா” என்று லேபிள் ஒட்டப்பட்டுள்ளது.

By admin