• Sat. Jun 21st, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் – இரான் இடையிலான மோதல் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியை பாதிப்பது ஏன்?

Byadmin

Jun 21, 2025


இரான்–இஸ்ரேல் மோதல், இந்திய தேயிலை, வணிகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடு முழுவதும் 2,31,093 விவசாயிகளால் 15 லட்சத்து 31 ஆயிரத்து 495 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுகிறது.

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

இஸ்ரேல் – இரான் இடையிலான மோதல் காரணமாக, இந்தியா – இரான் இடையே நடைபெற்று வந்த தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தேயிலை ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

இனிவரும் நாட்களில் இரானை ஒட்டியுள்ள பிற நாடுகளுக்கு தேயிலை அனுப்புவதும் தடைபடுமென்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இதனால் பெரிய பாதிப்பு வர வாய்ப்பில்லை. அப்படி வரும்பட்சத்தில் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தேயிலை வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசின் தேயிலை வாரிய இணையதளம் பகிரும் தகவலின்படி, இந்தியாவில் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேயிலை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

By admin