• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 பேர் பலி

Byadmin

Oct 4, 2024


ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், நேற்று காசாவின் வட மேற்குக்கரையில் உள்ள துல்கர் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், மற்றும் பலர் காயமடைந்தாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துல்கர் முகாமில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாலஸ்தீன பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் பைசல் சலாமா கூறியுள்ளார்.

By admin