• Thu. Nov 27th, 2025

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

Byadmin

Nov 27, 2025


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி, டொனால்ட் டிரம்ப் இருவரையும் தனது சிறந்த நண்பர்கள் என்று பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிடுகிறார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோதியுடனான இஸ்ரேலின் உறவு மிகவும் வலுவானது என்று கூறியுள்ளது.

“நரேந்திர மோதி தலைமையின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து இஸ்ரேல் பிரதமருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பிரதமரின் இந்திய பயணத்திற்கான புதிய தேதிகளைப் பற்றி அவரது குழு ஏற்கெனவே ஆலோசனை நடத்தி வருகிறது” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

அதாவது, நெதன்யாகு தனது இந்திய பயணத்தை ஒத்தி வைத்துவிட்டார் என்பதையும், புதிய தேதி இன்னும் முடிவாகவில்லை என்பதையும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வரவிருக்கும் நிலையில், நெதன்யாகு தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

வியாழக்கிழமை அன்று, ஹீப்ரு மொழி செய்தி இணையதளமான ஐ24 நியூஸ் நெதன்யாகு பாதுகாப்புக் காரணங்களுக்காக தனது இந்திய பயணத்தை ரத்து செய்ததாக செய்தி வெளியிட்டது.

By admin