• Mon. Feb 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் பெரியார் குறித்து பேசுவதற்கு இதுதான் காரணமா? திமுக வெல்லுமா?

Byadmin

Feb 3, 2025


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
படக்குறிப்பு, திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

பிப்ரவரி 5 ஆம் தேதியன்று நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், வழக்கமான இடைத்தேர்தல் பரபரப்புகளையும், அரசியல் பிரமுகர்களின் பரப்புரைகளையும் பார்க்க முடியவில்லை.

முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாத நிலையில், தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் மோதுகின்றனர்.

இந்த தேர்தலின் முடிவுகளை விட, இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சியின் வாக்கு வங்கி கூடுகிறது, குறைகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் களத்தில் பிரசாரம் எவ்வாறு நடக்கிறது?

By admin