• Fri. Dec 19th, 2025

24×7 Live News

Apdin News

ஈரோடு தவெக பொதுக்கூட்டம் பாதுகாப்பாக நடக்க காவல்துறை செய்த மாற்றங்கள் என்ன?

Byadmin

Dec 19, 2025


ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன?  பிபிசி கள நிலவரம்

பட மூலாதாரம், TVK

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.

நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும், மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்லும் வழிகள், உரிய நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 84 நிபந்தனைகளை இந்த கூட்டத்துக்கு காவல்துறை விதித்தது.

இருவர் மயக்கமடைந்தது, தடுப்பை ஏறிக் குதித்தபோது ஒருவருக்கு காலில் அடிபட்டது ஆகியவை தவிர இந்த கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்தது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தவெக பொதுக்கூட்டம் பாதுகாப்பாக நடக்க காவல் துறை செய்த மாற்றங்கள் என்ன?

கரூர் சம்பவத்திற்குப் பிறகான முதல் பொதுக்கூட்டம்

கரூரில் கடந்த செப்டெம்பர் 27ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர்.

இதனால் தவெக மீது மிகவும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்து, இதுகுறித்து விஜய் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர், தமிழக அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

By admin