• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

ஈரோட்டில் நள்ளிரவில் குழந்தையை கடத்திய நபர் 25 நாட்களுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

Byadmin

Nov 12, 2025


ஈரோடு, குழந்தை கடத்தல், தமிழ்நாடு, குழந்தைகள் பாதுகாப்பு

பட மூலாதாரம், UGC

“அன்று இரவு நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. பாலத்தின் அடியில் படுத்திருந்தோம். இரவு 12 மணி வரை பேசிவிட்டு தூங்கச் சென்றோம். சற்று நேரத்தில், ‘குழந்தையைக் காணவில்லை’ என, என் மகன் சத்தம் போட்டான். யாரோ கொசு வலையை அறுத்து குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டனர்” எனக் கூறுகிறார், சினையன்.

இவரது ஒன்றரை வயதுள்ள பேத்தியை கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். அருகில் உள்ள கடை ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சியில் இரவு மணி 12.50 என பதிவாகியிருந்ததாக பிபிசி தமிழிடம் சினையன் தெரிவித்தார்.

குழந்தையை 25 நாட்களுக்குப் பிறகு காவல்துறை மீட்டுள்ளது. “ஆனால், கடத்திய நபரைக் கண்டறிய சிசிடிவி துணை புரியவில்லை” எனக் கூறுகிறார், ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.எம்.தங்கவேல்.

கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் காவல்துறை கைது செய்தது எப்படி?

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாச்சலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதிக்கு ஊர் ஊராகச் சென்று துடைப்பம், ஊஞ்சல் உள்ளிட்டவற்றை விற்பது தொழிலாக உள்ளது.

By admin