• Sun. Nov 23rd, 2025

24×7 Live News

Apdin News

உச்ச நீதிமன்றம் கூறியதை பயன்படுத்தி ஆளுநரால் மசோதாக்களை முடக்கிவிட முடியுமா?

Byadmin

Nov 23, 2025


உச்ச நீதிமன்றம் கூறியதை பயன்படுத்தி ஆளுநரால் மசோதாக்களை முடக்கிவிட முடியுமா?

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்தியாவில் சட்டம் இயற்றும் மன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குடியரசுத் தலைவர் இது தொடர்பாக எழுப்பிய 14 கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகள் குறித்து, மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார்.

குடியரசுத் தலைவருடைய கேள்விகளின் பின்னணி என்ன?

கேள்வி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் காலக்கெடு நிர்ணயிப்பது உள்பட குடியரசுத் தலைவர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு (Presidential Reference) உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்த உங்கள் பார்வை என்ன?

பதில்: குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் கால அவகாசத்தைக் குறிப்பிட முடியாது என குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் இப்போது உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

By admin