• Mon. Oct 6th, 2025

24×7 Live News

Apdin News

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Byadmin

Oct 6, 2025


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவய்  மீது தாக்குல் முயற்சி நடந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவய் மீது தாக்குல் முயற்சி நடந்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவய் மீது இன்று (திங்கட்கிழமை) தாக்குல் முயற்சி நடந்துள்ளது.

நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் பிபிசியிடம் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து பகிர்ந்த அனாஸ் தன்வீர், “இன்று வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கறிஞரை வெளியேற்றியபோது அவர், ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது’ எனக் கூட்டலிட்டார்.” என்றார்.

இந்த சம்பத்தின்போது நீதிபதி கவய் பொறுமையாக எந்த பரபரப்பும் இன்றி தொடர்ந்து வாதங்களை கேட்கத்தொடங்கியதாக தன்வீர் கூறினார்.

By admin