• Fri. May 16th, 2025

24×7 Live News

Apdin News

“உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க” – ஊட்டி தாவரவியல் பூங்காவில் வாக்கு சேகரித்​த முதல்வர் | Chief Minister collects votes at ooty flower show

Byadmin

May 16, 2025


ஊட்டி: ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் புகழ்​பெற்ற 127-வது மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா கோத்​தரி காய்​கறி கண்​காட்​சி​யுடன் தொடங்​கியது. தொடர்ந்​து, 127-வது மலர்க் கண்​காட்சி நேற்று தொடங்​கியது.

கண்​காட்சி வரும் 25-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தக் கண்​காட்​சி​யில் சுற்​றுலாப் பயணி​களைக் கவரும் வகை​யில் ஜெர்​மனி​யம் சைக்​ளோபின் பால்​சம், புதிய ரக ஆர்​னமெண்​டல்​கேல், ஓரியண்​டல் லில்​லி, பேன்சி மேரி​கோல்​டு, ஜினி​யா, டெல்​முனி​யம் உள்​ளிட்ட 275 வகை​யான, 7.5 லட்​சம் மலர்ச் செடிகள் பூங்​கா​வின் பல்​வேறு பகு​தி​களில் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், மலர் மாடம் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் 45 ஆயிரம் மலர்த் தொட்​டிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன.

விழா​வின் முக்​கிய அம்​ச​மாக சோழர்​களின் பெரு​மையை விளக்​கும் வகை​யில் ராஜ​ராஜ சோழனின் அரண்​மனை உரு​வம் 2 லட்​சம் கார்​னேசன் மற்​றும் ரோஜா, கிரை​சாந்​தம் மலர்​களால் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல, கரி​கால​னால் கட்​டப்​பட்ட கல்​லணை உரு​வம் 65 ஆயிரம் மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மொத்​தம் 7 லட்​சத்​திற்​கும் அதி​க​மான மலர்​களால் பட்​டத்து யானை, அன்​னப்​பறவை படகு உள்​ளிட்ட அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

கள்​ளிச்​செடி மாளிகை மற்​றும் கண்​ணாடி மாளிகை புதுப்​பிக்​கப்​பட்​டு, அரிய​வகை தாவரங்​கள் மற்​றும் மலர்ச் செடிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. தாவர​வியல் பூங்கா முழு​வதும் வண்ண விளக்​கு​கள் மற்​றும் தோரணங்​களால் அழகுபடுத்​தப்​பட்​டுள்​ளது. வழக்​க​மாக 5 நாட்​கள் நடக்​கும் மலர்க் கண்​காட்சி இம்​முறை 11 நாட்​கள் நடப்​ப​தால், பூந்​தொட்​டிகள் மற்​றும் மலர்ச் செடிகளின் எண்ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டு உள்ளது.

மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று காலை தொடங்​கி​வைத்​துப் பார்​வை​யிட்​டார். அமைச்​சர்​கள் எம்​ஆர்​கே. பன்​னீர்​செல்​வம், மு.பெ.​சாமி​நாதன், அரசு கொறடா கா.​ராமச்​சந்​திரன், நீல​கிரி எம்​.பி. ஆ.ராசா முன்​னிலை வகித்​தனர். தொடர்ந்​து, புதுப்​பிக்​கப்​பட்ட கண்​ணாடி மாளி​கையை முதல்​வர் திறந்​து​வைத்​து, கோத்​தர், தோடர் பழங்​குடி​யினர்​களின் கலை நிகழ்ச்​சிகளை கண்டு ரசித்​தார்.

நிகழ்​வில், மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்​யா, வேளாண் துறைச் செயலர் வ.தட்​சிணா​மூர்த்​தி, தோட்​டக்​கலை இயக்​குநர் குமார​வேல் பாண்​டியன், எஸ்​.பி. என்​.எஸ்​.நிஷா, ஊட்டி எம்​எல்ஏ ஆர்​.கணேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். தொடக்க விழாவுக்​குப் பின்​னர், மலர்​களால் செய்​யப்​பட்ட அரண்​மனை, கல்​லணை உள்​ளிட்​ட​வற்றை சுற்​றுலாப் பயணி​கள் ஆர்​வத்​துடன்​ செல்ஃபி எடுத்​து மகிழ்​ந்​தனர்​.

வாக்கு சேகரித்த முதல்வர்… மலர்க் கண்​காட்​சியை மனைவி துர்கா உடன் பார்வையிட்ட முதல்வர், ஆயிரக்​கணக்​கான மலர்​களைக் கொண்டு வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள அரியணை​யில் அமர்ந்து புகைப்​படங்​கள் எடுத்​துக் கொண்டார். அப்போது, ‘உதயசூரியனுக்கு ஓட்​டுப் போடுங்க’ என்று பூங்​கா​வில் இருந்​தவர்​களிடம் முதல்வர் கேட்​டுக் கொண்​டார். மலர் அரியணை​யில் அமர்ந்து 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு வாக்கு சேகரித்​தது அனைவரின் கவனத்தையும்​ ஈர்​த்​தது.



By admin