• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

உத்தரபிரதேசம்: அமேதியில் தலித் ஆசிரியர் குடும்பத்துடன் சுட்டுக் கொலை – என்ன நடந்தது?

Byadmin

Oct 6, 2024


உத்தரபிரதேசம், தலித், கொலை

பட மூலாதாரம், X/AMETHI POLICE

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட சந்தன் வர்மாவுடன் அமேதி போலீசார்

அக்டோபர் 3-ஆம் தேதி, உத்தரபிரதேசத்தின் அமேதி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியராக இருந்த சுனில் பார்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக அமேதி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, டெல்லிக்கு அருகில் உள்ள கவுதம் புத்த நகர் மாவட்டத்தின் ஜெவர் டோல் பிளாசாவில் சந்தன் வர்மா என்ற நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை காதல் விவகாரம் தொடர்பானது என்று தெரியவந்திருப்பதாக அமேதி போலீசார் கூறியுள்ளனர்.

By admin