• Thu. Aug 28th, 2025

24×7 Live News

Apdin News

உத்தரப் பிரதேசம்: பணமில்லாமல் தந்தையின் உடலுடன் அலைந்த குழந்தைகளுக்கு உதவிய முஸ்லிம்கள்

Byadmin

Aug 28, 2025


உயிரிழந்தவரின் மகன் பேட்டியளிக்கும் காட்சி

பட மூலாதாரம், Azeem Mirza

படக்குறிப்பு, இறந்தவரின் குழந்தைகள் தந்தையின் உடலுடன் அலைந்துகொண்டிருந்தனர்

உத்தரப் பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவுதன்வாவில் ஒருவர் இறந்த பிறகு, அவரது மூன்று குழந்தைகள் இறுதிச் சடங்கு செய்வதற்கு பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

சிறார்கள் தங்கள் தந்தையின் உடலுடன் இங்கும் அங்கும் அலைந்தனர், ஆனால் அருகிலுள்ளவர்களோ அல்லது உறவினர்களோ அவர்களுக்கு உதவி செய்யவில்லை.

இறுதியாக, ஒரு வார்டு உறுப்பினரின் உதவியுடன் அவர்கள் தங்கள் தந்தையின் இறுதிச் சடங்கைச் செய்ய முடிந்தது.

மறுபுறம், மாவட்ட நிர்வாகம், இந்தச் சம்பவம் பற்றிய தகவல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் அந்த சிறார்களுக்கு உரிய நேரத்தில் உதவ முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

By admin