• Tue. Nov 25th, 2025

24×7 Live News

Apdin News

உத்தராகண்டின் இந்த பழங்குடி கிராமங்களில் பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு ஏன்?

Byadmin

Nov 25, 2025


தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், உத்தராகண்டின் ஒரு பழங்குடிப் பகுதி விவசாயிகள் ஒரு புதிய முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பட மூலாதாரம், Varsha Singh

படக்குறிப்பு, நகைகளுக்கு வரம்பு விதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று சில பெண்கள் கருதுகிறார்கள் என, கந்தட் கிராமத்தைச் சேர்ந்த ரேகா சௌஹான் கூறுகிறார்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், உத்தராகண்டின் ஒரு பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு புதிய முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஜான்சர் பவார் பழங்குடிப் பகுதிக்குட்பட்ட கிராமங்களில், கிராமத்தின் வளம் குறையக்கூடாது என்ற நோக்கத்தில் நகைகளைப் பயன்படுத்த குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் பெண்கள் தொடர்பான இந்த முடிவு, அவர்கள் இல்லாதபோது எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தங்கத்தின் விலை வானளவு உயர்ந்த நிலையில், கந்தட் மற்றும் இந்த்ரோலி கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் அவசர கூட்டத்தைக் கூட்டினர்.

அச்சமயத்தில் திருமணத்துக்கான சுபநாட்கள் தொடங்கியிருந்த நிலையில், கிராமத்தில் இரண்டு குடும்பங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

By admin