• Wed. Dec 31st, 2025

24×7 Live News

Apdin News

உத்தராகண்டில் வடகிழக்கு இந்திய மாணவருக்கு நடந்தது என்ன? காவல்துறை மீது எழும் கேள்விகள் – முழு விவரம்

Byadmin

Dec 31, 2025


ஏஞ்சல் சக்மா

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, ஏஞ்சல் சக்மா டிசம்பர் 26 அன்று மருத்துவமனையில் இறந்தார்.

    • எழுதியவர், ஆசிஃப் அலி
    • பதவி, பிபிசி இந்திக்காக

உத்தராகண்டின் டேராடூனில் படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த 24 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், வட இந்தியாவில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாகுபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, டேராடூனின் சேலாகுய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைப் பகுதியில் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தனியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ இறுதியாண்டு பயின்று வந்த ஏஞ்சல் சக்மா என்ற மாணவர், கையில் அணியும் காப்பு மற்றும் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

திரிபுராவின் அகர்தலா அருகிலுள்ள நந்த்நகரைச் சேர்ந்த ஏஞ்சல், இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்து 16 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த நிலையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்தபோது அவரது தம்பி மைக்கேலும் அங்கேயே இருந்துள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆறாவது நபர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் டேராடூன் காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய உதவுபவர்களுக்கு உள்ளூர் காவல்துறை 25,000 ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது.

By admin