• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

உமர் காலித்துக்கு உச்ச நீதிமன்றம் பிணை மறுத்தது பற்றி தந்தை இலியாஸ் பேட்டி

Byadmin

Jan 7, 2026


உமர் காலித், டெல்லி கலவர சதி வழக்கு, ஜாமீன் மறுப்பு, தந்தை பேட்டி
படக்குறிப்பு, உமர் காலித்தின் தந்தை எஸ்.க்யூ.ஆர். இலியாஸ், நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் தனது போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் தெரிவித்தார்

உமர் காலித் மற்றும் மற்ற ஆறு பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவர் ஐந்தாம் தேதி வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

2020-ஆம் ஆண்டில் டெல்லியில் வகுப்புவாத வன்முறையை தூண்ட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களின் ஜாமீன் மனுக்கள் மீது முதன்முறையாக உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க இருந்ததால் அது முக்கியமானதாக கருதப்பட்டது.

தன் மகன் மீண்டும் வீடு திரும்புவான் என்ற நம்பிக்கையுடன், அன்றைய தினம் காலையில் உமர் காலித்தின் தந்தை எஸ்.க்யூ.ஆர். இலியாஸ் உச்ச நீதிமன்றத்தை அடைந்தார்.

பிபிசி ஹிந்தியிடம் அவர் பேசுகையில், “நான் நீதிமன்றத்திற்குள் நுழைந்த போது, எல்லோரும் என்னிடம் இனிப்பு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்களா என கேட்டனர்” என்றார்.

பல மாத விசாரணைக்குப் பிறகு அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருந்தது.

By admin