• Wed. Sep 3rd, 2025

24×7 Live News

Apdin News

உமர் காலித் உட்பட 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி – குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதம் என்ன?

Byadmin

Sep 3, 2025


உமர் காலித் ஜாமீன் மனு

பட மூலாதாரம், Getty Images

உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுக்கள் 2020 டெல்லி கலவரம் தொடர்பானவை. டெல்லி கலவரம் ஒரு ‘பெரிய சதி’யின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது. இந்த உத்தரவின் எழுத்துப்பூர்வ நகல் இன்னும் வழங்கப்படவில்லை.

ஷர்ஜீல் இமாம், உமர் காலித், குல்பிஷான் பாத்திமா, அதர் கான், அப்துல் காலித் சைஃபி, முகமது சலீம் கான், ஷிஃபா-உர்-ரஹ்மான், மீரான் ஹைதர் மற்றும் ஷதாப் அகமது ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தஸ்லீம் அகமதுவின் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

By admin