உயிரை உரமாக்கி
வளர்த்தபயிர்
கருக விடலாமோ
சுதந்திரப்பயிர்
ஆசைக்குயிலே –மழை வர
பாடு குயிலே…
அடிமைகளாக
சுயம் தொலைக்கின்ற
அவலம் முடிக்கும்
உறுதிகள் செய்வோம் !
விடியலின் திசையில்
விழித்திடும் இந்நாள்
பெருமைகள் காத்தே
உயிர்த்திடுவோம்!!
– மகானுபவன்
The post உயிர்த்திடுவோம்! | மகானுபவன் appeared first on Vanakkam London.