• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

உலகிலேயே அதிக அணு ஆயுத பதுங்குக் குழிகளைக் கொண்ட சுவிட்சர்லாந்து : அவற்றை நவீனமயமாக்க விரும்புவது ஏன்?

Byadmin

Aug 23, 2025


சுவிட்சர்லாந்து, சிவில் பாதுகாப்பு, பதுங்குக் குழிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து சிவில் பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது, நாடு முழுவதும் பதுங்குக் குழிகள் நிரம்பியுள்ளன

“உனக்கு அமைதி வேண்டுமென்றால், போருக்குத் தயாராகு” என்ற சொலவடை குறைந்தபட்சம் சுவிட்சர்லாந்திற்கு பொருந்தும்.

நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்திற்கு தோண்டப்பட்ட சுவிஸ் ஆல்ப்ஸின் கடினமான பாறைகளில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்திற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆல்ப்ஸ் மலையானது, நூற்றுக்கணக்கான அணுசக்தி எதிர்ப்பு பதுங்குக் குழிகளைக் கொண்ட சிக்கலான வலையமைப்பை தன்னில் கொண்டுள்ளது.

சுரங்கப்பாதைகளின் நுழைவாயில்கள் மேடுகளின் கீழ், காட்டில் சிறிய கதவுகளுக்குப் பின்னால், அல்லது வெளிப்புறத்தில் வீடுகள் போல் தோற்றமளிக்கும் கட்டடங்களின் கீழ் மறைந்துள்ளன. உண்மையில் அவை இரண்டு மீட்டர் உயர கான்கிரீட் சுவர்களையும், துப்பாக்கியை பொருத்துவதற்கான துளைகளைக் கொண்ட ஜன்னல்களையும் கொண்ட சுரங்கப்பாதைகளாகும்.

8.8 மில்லியன் மக்கள்தொகைக் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் 370,000 க்கும் மேற்பட்ட அணுசக்தி தங்குமிடங்கள் இருப்பதால், உலகிலேயே அதிக தனிநபர் பதுங்கிடங்கள் கொண்ட நாடு என்ற பெயரைப் பெற்றுத்தந்துள்ளது. உண்மையில் மக்களை விட அதிக தங்குமிடங்கள் இருப்பதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

By admin