• Wed. Oct 8th, 2025

24×7 Live News

Apdin News

உலகை ஈர்க்கும் மாநிலம் தமிழகம்; தொழில் துறையில் இரட்டை இலக்க வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | Tamil Nadu attracts the world says CM Stalin

Byadmin

Oct 8, 2025


சென்னை: சென்​னை​யில் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு துறைக்​கான சர்​வ​தேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தமிழகம் உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது என்று தெரி​வித்​தார்.

சென்​னை​யில், டிட்​கோ, பிசிஐ ஏரோஸ்​பேஸ் (பி​ரான்​ஸ்), மற்​றும் தமிழ்​நாடு ஏரோஸ்​பேஸ் தொழில் வளர்ச்சி கூட்​டமைப்பு இணைந்து நடத்​தும் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்​வ​தேச மாநாட்டை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். இம்​மா​நாட்​டில் 19 நாடு​கள் மற்​றும் 300 நிறு​வனங்​கள் பங்​கேற்​றுள்​ளன.

தொழில்​துறை, கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனங்​களுக்​கிடையே 5,000-க்​கும் மேற்​பட்ட வணிக சந்​திப்பு கூட்​டங்​களும் நடை​பெறுகின்​றன. இம்​மா​நாட்​டின் கண்​காட்​சி​யில் முன்​னணி நிறு​வனங்​கள், நடுத்தர ரக நிறு​வனங்​கள் மற்​றும் பாது​காப்பு பொதுத்​துறை நிறு​வனங்​கள் தங்​கள் அரங்​கு​களை அமைத்​துள்​ளன.

மாநாட்​டில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 என்ற இந்த மாநாட்டை தமிழகத்​தில் முதன்​முறை​யாக நாம் தொடங்கி வைத்​திருக்​கிறோம். தமிழகம் இன்​றைய தினம், இந்​தி​யாவை ஈர்க்​கும் நிலை​யில் இருந்​து, உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது. இப்​படிப்​பட்ட முன்​னோடி​யான மாநாடு​களை நம்​முடைய தொழில்​துறை சார்​பில் நடத்​து​வ​தால்​தான், இந்த மாநாடு​கள் எல்​லாம், உலகள​வில் பேசப்​படு​கிறது. மேலும், அனைத்​து​வித​மான வளர்ந்துவரும் தொழில்​களை​யும் கொண்ட மாநில​மாக தமிழகம் இருப்​ப​தன் அடை​யாளம்தான் இந்த மாநாடு. இது வெறும் கண்​காட்சி இல்​லை. புதிய தொழில்நிறு​வனங்​கள், உற்​பத்​தியாளர்​கள் ஆகியோரை கண்டறிந்​து, அவர்​களிடையேகூட்டு முயற்​சி​யில் புதிய தொழில் ஒப்​பந்​தங்​களை ஏற்படுத்​து​வதற்​கான தளம்.

தமிழகம் உற்​பத்தி துறை​யில் லீட​ராக மாறிக்​கொண்டு வரு​கிறது. தமிழ்​நாடு பாது​காப்பு தொழில்​துறை வழித்​தடம் எதிர்​காலத்​தில் முக்​கிய பங்​காற்ற இருக்​கிறது. உயர்தர ஜெட் இன்​ஜின் பாகங்​களில் இருந்து, டிரோன்​கள் உற்​பத்தி வரை நடை​பெற இருக்​கிறது. வளர்ந்​து​வரும் விண்​வெளி தொழில்​நுட்​பம் சார்ந்த உற்​பத்தி பிரிவு​கள் இதில் இருக்​கின்​றன. தமிழ்​நாடு பாது​காப்பு தொழில்துறை வழித்​தடத் திட்​டத்தை செயல்​படுத்த தொடங்​கிய​தில் இருந்​து, இது​வரை ரூ.23 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டிருக்​கின்​றன. இதில், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்​பிலான திட்​டங்​கள் ஏற்​கெனவே செயல்​படுத்​தப்​பட்​டிருக்​கிறது. 2032-க்​குள், ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க நாங்​கள் இலக்கு நிர்​ண​யித்​திருக்​கிறோம். இந்த வழித்​தடத்​தில் இருக்​கும், ஒவ்​வொரு நகர​மும் தனித்​து​வமான மையங்​களாக விளங்​கு​கின்​றன.

இந்த நிகழ்​வில். எங்க ளோடு இணைந்​திருக்​கும் 19-க்​கும் மேற்​பட்ட நாடு​களு​டன் சேர்ந்​து, தொழில் வளர்ச்​சிக்​காக செயல்​படு​வோம். வடிவ​மைப்​பு, மேம்​பாடு, உற்​பத்தி மற்​றும் ஏற்​றுமதி ஆகிய​வற்றுக்​கான முன்​னணி தளமாக தமிழகம் திகழ வேண்​டும். அதற்கு பெரும் ஆதர​வும் தேவை. வானூர்​தி, விண்​வெளி, கப்​பல் உற்​பத்தி மற்​றும் பாது​காப்​புத் துறை​களில் புது​மை​கள் நிறைந்த, ஏற்​றும​திக்கு உகந்த, தன்​னிறைவு பெற்ற, இந்​தி​யாவை உரு​வாக்க பாது​காப்​புத் துறை​யில் பணி​யாற்​றும் அறி​விய​லா​ளர்​களுக்​கும், தொழில் முனை​வோருக்​கும், முதலீட்​டாளர்​களுக்​கும் தமிழக அரசு எப்​போதும் துணை நிற்​கும். இந்​தி​யா​வின் பாது​காப்பை மட்​டுமல்ல, உலக அமை​தி, வளம் மற்​றும் முன்​னேற்​றத்தை இயக்​கும் ஆற்​றலாக​வும் தமிழகம் திகழும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொழில் துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா பேசும்​போது, “தமிழ்​நாடு பாது​காப்பு தொழில்​துறை வழித்​தடம் திட்​டத்​தில் சர்​வ​தேச தொழில் நிறு​வனங்​கள் முதலீடு செய்து இணைந்து செயல்​படு​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும். தமிழ்​நாடு தொழில் வளர்ச்​சிக் கழகம் மூலம் பாது​காப்​பு, சோதனை மற்​றும் ஒருங்​கிணைப்பு மையங்​கள் அமைக்​கப்​படும். புதிய தொழில்​துறை பூங்​காக்​கள் உரு​வாக்​கப்​படும். அடுத்​ததாக 2027-ல் நடை​பெறும் மாநாடு இன்​னும் பெரிய அளவில் நடத்​தப்​படும்” என்​றார்​.

இந்த மாநாட்​டில் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன், டி.ஆர்​.​பாலு எம்​.பி., இ.கருணாநிதி எம்​எல்ஏ, கடலோர காவல்​படை​யின் தலைமை இயக்​குநர் பரமேஷ் சிவ​மணி, பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்​பின் விஞ்​ஞானி பி.கே. தாஸ், தொழில் துறை செய​லா​ளர் வி.அருண் ராய், தொழில் வழி​காட்டி நிறுவன மேலாண்மை இயக்​குநர் தாரேஷ் அகமது, டிட்கோ மேலாண்மை இயக்​குநர் சந்​தீப் நந்​தூரி, பிசிஐ ஏரோஸ்​பேஸ் முதன்மை செயல் அலு​வலர் ஸ்டீபன் காஸ்​டெட், மற்றும் உயர்​ அலு​வலர்​கள்​ பங்​கேற்​றனர்​.



By admin