• Mon. Dec 1st, 2025

24×7 Live News

Apdin News

உலக எய்ட்ஸ் தினம்: இந்தியாவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தின் நிலை என்ன? ஓர் அலசல்

Byadmin

Dec 1, 2025


"புள்ளி ராஜா, எய்ட்ஸ், பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது ஒரு மாதத்திற்கு முன்பு கண்டறியப்பட்டது. 27 வயதான ராஜு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்.

“எனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியானது. அப்போது எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்கள் அதிகம் இல்லாததால் அந்த நோய் இல்லை என்றே நினைத்துவிட்டேன். சில சமயங்களில் ஆணுறை பயன்படுத்தாமல் உறவு கொண்டது உண்மைதான்,” என்று பிபிசியிடம் பேசியபோது ராஜு கூறினார்.

91 சதவிகித எச்.ஐ.வி தொற்றுகள் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவுகின்றன, அவர்களில் 90 சதவீதம் பேர் 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் கூறுகிறது.

சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டியின் உறுப்பினரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மருத்துவருமான டாக்டர் கூட்டிகுப்பலா சூர்யா ராவ், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எய்ட்ஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். பிபிசி அவரிடம் பேசியபோது, எய்ட்ஸ் இல்லை என்று மக்கள் நம்புவதால், ஆணுறை பயன்படுத்தாமல் அல்லது பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றாமல் உடலுறவில் ஈடுபடுவதால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொன்னார்.

By admin