• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

உ.பி.யில் 3 இஸ்லாமிய முதியவர்களை தாக்கும் இளைஞர் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

Byadmin

Feb 25, 2026


உ.பியில் மூன்று இஸ்லாமியர்கள் தாக்கப்படும் காணொளி வைரல், தாக்குதலுக்கான காரணம் என்ன?

பட மூலாதாரம், Balabhadr/Shahbaz

“நானும் என் சக ஊழியர்களும் தாக்கப்பட்டோம். எங்களை நோக்கி மத ரீதியிலான கருத்துகளும் கூறப்பட்டன. நாங்கள் அமைதியாக அமர்ந்தோம்.அவர்கள் வீடியோவை வைரலாக்கினர். நாங்கள் எந்த சர்ச்சையையும் விரும்பவில்லை. ஆனால் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவர் மேல் சரியான பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படவில்லை”

உத்திரபிரதேசத்தின் பதாயூன் மாவட்டத்தில் உள்ள சஹாஸ்வான் காவல்நிலைய எல்லையில் வசிக்கும் 56 வயது அப்துல் சலாம் பிபிசி இந்தியிடம் இவ்வாறு கூறினார்.

அப்துல் சலாம் உட்பட மூன்று இஸ்லாமிய முதியவர்களை இளைஞர் ஒருவர் அறையும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணமான அக்‌ஷய் சர்மா என்ற இளைஞர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் அந்த இளைஞர் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

காவல்துறையின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை கூறுவது என்ன?

அப்துல் சலாம் இந்தச் சம்பவம் குறித்துக் கூறுகையில், “பிப்ரவரி 16 அன்று, மொஹல்லா கட்ராவைச் சேர்ந்த எங்களது நண்பர் ஆரிஃப் மற்றும் மொஹல்லா சிஸ்டம் டோலாவைச் சேர்ந்த ஜாவித் ஆகியோருடன் பில்சி தாலுகாவிலுள்ள இஸ்லாம் நகர் எல்லைக்குட்பட்ட ருதாயன் பகுதிக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நாங்கள் நன்கொடை சேகரிக்க வேண்டியிருந்தது. அப்போது ஒரு வாலிபர் பின்னால் இருந்து வந்து எங்களது ஆதார் அட்டையைக் காட்டச் சொன்னார். அதன் பிறகு எங்களைப் பற்றி மத ரீதியான கருத்துகளைக் கூறி, எங்களைத் தாக்கினார்; எங்களது தொப்பிகளைக் கழற்றும்படியும் கூறினார். அங்கு அவர்கள் நான்கு பேர் இருந்தனர்” என்றார்.

By admin