• Thu. Mar 6th, 2025

24×7 Live News

Apdin News

எஃப்-35 அல்லது சு-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா – ரஷ்யா போட்டி

Byadmin

Mar 5, 2025


போர் விமானங்கள், இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுகோய்-57 மற்றும் எஃப்-35 போர் விமானங்கள்

இந்தியா தனது விமானப்படையை நவீனமயமாக்குவதில், ஒரு முக்கியமான முடிவினை எடுக்க வேண்டியதாக இருக்கின்றது. அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவது இதற்கு தீர்வாகுமா?

கடந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே வழங்கக் கூடிய எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

எஃப்-35 என்பது மேம்பட்ட சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தாக்குதல் அமைப்புகள் மற்றும் தடையற்ற தகவல் பகிர்வு திறன்களைக் கொண்ட “ஐந்தாம் தலைமுறை” போர் விமானமாகும். இது எதிரிகளின் ரேடார்களில் சிக்காத வகையில் அதாவது, எதிரிகளுக்குப் புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு மிகவும் அதிநவீன மற்றும் விலை உயர்ந்த போர் விமானமாகும். ஒரு எஃப்-35 போர் விமானத்தின் விலை 80 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (எதிரி ரேடார்களுக்குப் புலப்படாமல் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்துவது என்பது “ஐந்தாம் தலைமுறை” போர் விமானத்தின் முக்கிய அம்சமாகும்)

By admin