• Thu. Nov 20th, 2025

24×7 Live News

Apdin News

எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்கா சௌதி அரேபியாவுக்கு விற்பதால் இஸ்ரேலுக்கு என்ன சிக்கல்?

Byadmin

Nov 20, 2025


எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்கா சௌதி அரேபியாவுக்கு விற்பதால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட போர் விமானமான எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

செளதி அரேபியாவுக்கு இந்தப் போர் விமானங்கள் கிடைத்தால், அந்தத் தொழில்நுட்பத்தை சீனா அறிந்துகொள்ளக் கூடும் என்ற கவலைகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.

செளதி அரேபியாவிடம் இந்த சக்திவாய்ந்த விமானங்கள் இருப்பது, மத்திய கிழக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேலின் “தனித்துவமான ராணுவ முன்னிலையை” பாதிக்கக்கூடும் என டிரம்ப் நிர்வாகத்தினரும் கவலை தெரிவிக்கின்றனர்.

செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்க பயணத்தின்போது பேசியபோதும், அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்தப் போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு வழங்கப் போவதாக மீண்டும் குறிப்பிட்டார்.

டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் எஃப்-35 போர் விமான விற்பனை தொடர்பான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது, ஆனால் அது இறுதி முடிவை எட்டவில்லை.

By admin