• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

எஃப்15: அமெரிக்க போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியது எப்படி? புதிய தகவல்

Byadmin

Mar 3, 2026


எஃப்15 போர் விமானம், அமெரிக்கா, குவைத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குவைத்தில் விழுந்து நொறுங்கிய மூன்று அமெரிக்க போர் விமானங்கள் குறித்த புதிய தகவலை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், தனது மூன்று எஃப்-15 போர் விமானங்கள் குவைத்தில் ‘தவறுதலாக’ சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. “குவைத் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது, குவைத் வான் பாதுகாப்புப் படைகளின் முயற்சிகளுக்கும், நடைபெற்று வரும் நடவடிக்கையில் அவர்களின் ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.”

“ஏதேனும் புதிய தகவல்கள் தெரியவரும்போது, அவை பகிரப்படும்” என அறிக்கை தெரிவிக்கிறது.

By admin