• Wed. Mar 19th, 2025

24×7 Live News

Apdin News

எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? பின்னணியில் என்ன நடந்தது?

Byadmin

Mar 19, 2025


எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

“தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டாம். நான் யாரையும் எதிர்பார்த்தது இல்லை. கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என அவரிமே கேளுங்கள்.”

செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு மார்ச் 15ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி இது.

அதுவே மார்ச் 17ஆம் தேதி அவர் அளித்த பேட்டியில் சற்று உற்சாகம் தென்பட்டது.

அப்போது, “எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் முதலமைச்சர் ஆன காலத்தில் இருந்தே இதே திட்டத்தைப் போட்டு வருகிறார்கள். அ.தி.மு.க-வை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது,” எனக் கூறினார்.

By admin