• Tue. Feb 11th, 2025

24×7 Live News

Apdin News

எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன்: கோவையில் நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணிப்பு ஏன்?

Byadmin

Feb 10, 2025


பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்?

அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அந்த விழாவை புறக்கணித்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், விழாவுக்கான அழைப்பிதழில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் பங்கேற்கவில்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கருத்தை டிடிவி தினகரன் போன்றோர் விமர்சித்து வரும் நிலையில், அந்த நிகழ்ச்சி அரசியல் சார்ந்தது இல்லை என்பதால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படவில்லை என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே கருத்தை அதிமுக சார்பில் ஜெயக்குமாரும் கூறியுள்ளார்.

By admin