• Wed. Feb 5th, 2025

24×7 Live News

Apdin News

எட் ஷீரன்: சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தும் உலகப்பிரபலம் – இவர் யார்?

Byadmin

Feb 4, 2025


எட்ஷீரன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எட்ஷீரன்

அண்மை காலமாக இந்தியாவில் சர்வதேச இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தும் நிகழ்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

தனது இசையால் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் 33 வயதான எட் ஷீரன். சென்னையில் தனது இசை நிகழ்ச்சியை பிப்ரவரி 5-ஆம் தேதி நடந்துகிறார்.

சமீப ஆண்டுகளில் உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட பிரபல இசைக்கலைஞர் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் கான்செர்ட் பொருளாதாரம்

உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டா(statista), “இந்திய இசைத்துறையின் மதிப்பு 2021ஆம் ஆண்டு 1900 கோடி ரூபாயாக இருந்தது. 2026ஆம் ஆண்டுக்குள் 3700 கோடி ரூபாயாக உயரும்”, என மதிப்பிடுகிறது.

By admin