• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு இந்திய விமானங்களை எப்படி பாதிக்கும்? என்ன ஆபத்து?

Byadmin

Nov 26, 2025


விமானத்தின் உட்புறத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம்பல் காரணமாக விமானத்தின் சென்சார்களும் பழுதடையலாம்.

எத்தியோப்பியாவில் ஹைலி குப்பி எரிமலை வெடித்ததன் காரணமாக, வானத்தில் பல கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகங்கள் காணப்படுகின்றன.

இதன் தாக்கம் இந்தியா வரை உணரப்படுகிறது. இந்தச் சாம்பல் மேகங்கள் செங்கடலைக் கடந்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா நோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்த மேகங்கள் மிக அதிக உயரத்தில் இருப்பதால், தரையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது. ஆனால், இந்த உயரத்தில்தான் பெரும்பாலான பயணிகள் விமானங்கள் பறக்கின்றன.

“எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட உயரம் கடல் மட்டத்தில் இருந்து 8.5 கி.மீ (5.2 மைல்) முதல் 15 கி.மீ வரை மேலே உள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹாபாத்ரா, பிபிசியிடம் கூறினார்.

“இது செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் விமான இயக்கங்களை தற்காலிகமாகப் பாதிக்கலாம். ஆனால், வானிலை நிலைமைகள், காற்றின் தரம் அல்லது பருவமழையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. எரிமலை சாம்பல் திங்கள்கிழமை இரவு வட இந்தியாவை அடைந்தது, இப்போது அது சீனா நோக்கி நகர்வதாகத் தெரிகிறது” என்று மொஹாபாத்ரா கூறினார்.

By admin