• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

“என்னை வேவு பார்த்தது என் மகன் அன்புமணி தான்!” – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு | Ramadoss accuses Anbumani for tapping his conversations

Byadmin

Aug 2, 2025


சென்னை: “உலகத்திலேயே, தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள்” என்று அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில், இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியது: “உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள். இது குறித்து காவல் துறையிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும், நான் தனியாக தனியார் சிறப்பு அமைப்பு மூலமாகவும் விசாரணை நடத்தச் சொல்லியுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள்.

தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க 108 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், 100 மாவட்டச் செயலாளர்களை அன்புமணி போனில் அழைத்து, கூட்டத்துக்கு போகவேண்டாம் எனச் சொல்லி நிறுத்தினார்.

இப்போது, பாமகவின் மகளிர் அணி மாநாடு வரும் 10-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், 3 லட்சம் மகளிர் பங்கேற்க இருக்கிறார்கள். பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். அன்புமணி நடத்தும் பொதுக்குழு, நடைபயணம் அனைத்தும் பாமகவின் விதிகளுக்கு எதிரானது” என்றார் ராமதாஸ்.

பாமக பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ், அன்புமணி போட்டி அறிவிப்பு – முன்னதாக, பாமக தலைமை நிலை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில், ‘பாமக நிறுவனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸ் உத்தர​வுபடி, திண்​டிவனம் – புதுச்​சேரி செல்​லும் வழி​யில் உள்ள பட்​டானூர் சங்​கமித்ரா திருமண மண்​டபத்​தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்​றிய, நகர நிர்​வாகி​கள் தவறாது கலந்​து​கொள்​ளு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ராம​தாஸ் நடத்​துக்​கும் கூட்​டத்​துக்கு போட்​டி​யாக ஆக. 9-ம் தேதி பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என்று பாமக தலை​வர் அன்​புமணி அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அன்​புமணி மற்றும் பொதுச் செய​லா​ளர் வடிவேல் ராவணன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பாமக பொதுக்​குழுக் கூட்​டம் மாமல்​லபுரத்​தில் உள்ள கான்ப்​ளுயன்ஸ் அரங்​கில் ஆக. 9-ம் தேதி நடை​பெறும். பொதுக்​குழு உறுப்​பினர்​கள் தவறாது பங்​கேற்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்கது.



By admin