• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

எப்ஸ்டீன் விவகாரம்: தொழிற்கட்சியிலிருந்து விலகுவதாக லார்ட் மண்டேல்சன் அறிவிப்பு

Byadmin

Feb 2, 2026


இங்கிலாந்தின் ஆளும் அரசாங்கமான தொழிற்கட்சியின் முக்கிய உறுப்பினரான லார்ட் மண்டேல்சன்( Lord Mandelson), கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எப்ஸ்டீன் உடனான தொடர்புகள் காரணமாக அரசாங்கத்திற்கும் கட்சிக்கும் மேலும் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள இராஜினாமா கடிதத்தில், எப்ஸ்டீனைச் சுற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தன்னைப் பாதித்துள்ள கவலைகளை குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்ஸ்டீன் தமக்கு நிதி உதவி வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தாம் நம்புவதாகவும், அதற்கான பதிவுகளோ அல்லது தனிப்பட்ட நினைவுகளோ தமக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலாளர் கட்சிக்கு அவமானம் ஏற்படுத்த விரும்பாததால் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், நீண்ட காலத்திற்கு முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டிய பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, 2003 மற்றும் 2004 ஆண்டுகளில் மூன்று தனித்தனி பரிவர்த்தனைகளின் மூலம் எப்ஸ்டீன் லார்ட் மண்டேல்சனுக்கு மொத்தம் 75,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் £55,000) வழங்கியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் Kemi Badenoch, லார்ட் மண்டேல்சனின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தவும், எப்ஸ்டீனுடனான அவரது உறவுகள் குறித்து முழுமையான விசாரணையைத் தொடங்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

By admin