• Wed. Jun 11th, 2025

24×7 Live News

Apdin News

எம்ஜிஆரின் ரூ.25 கோடி பங்களா சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக புகார் – இன்றைய முக்கியச் செய்தி

Byadmin

Jun 10, 2025


இன்றைய முக்கியச் செய்திகள், திருச்சி, எம்ஜிஆர்
படக்குறிப்பு, கோப்புப் படம்

இன்று, ஜூன் 10, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம்.

‘திருச்சியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பங்களாவின் பட்டாவில் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றி, எம்ஜிஆரின் வாரிசுகள் பெயரில் பட்டாவை மாற்றித்தர வேண்டும்’ என திருச்சி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழின் செய்தி கூறுகிறது.

அந்தச் செய்தியின்படி, இதுகுறித்து திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையில், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு சொந்தமான பங்களா மற்றும் காலியிடம் 80,000 சதுரடி பரப்பளவில் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.25 கோடி இருக்கும்.

By admin