• Sun. Oct 20th, 2024

24×7 Live News

Apdin News

எம்-எர்த்ஸ்: வேற்றுக்கிரகவாசிகளின் உலகில் பகல்-இரவு வேறுபாடு இருக்காது என்று கருதப்படுவது ஏன்?

Byadmin

Oct 20, 2024


எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.

இரவு பகலை பற்றி பேசுகையில், வேற்றுக்கிரகவாசிகள் தூங்குவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. உயிர்களை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பல கிரகங்களில் பகல்-இரவு சுழற்சி இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயம், பூமியிலும் ஆழமான நிலத்தடி அல்லது கடலின் அடிப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒளியற்ற வாழ்விடங்களில் வசிக்கின்றன.

இவை சர்க்காடியன் இசைவு (circadian rhythm) இல்லாத வேற்றுக்கிரகங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன.

எம்-எர்த், பகல்-இரவு
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நமது விண்மீன் மண்டலத்தில் உயிர்கள் வாழக்கூடிய தன்மை கொண்ட பில்லியன்கணக்கான கிரகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கைக்கு பின்னால் ஒரு விளக்கம் உள்ளது. பால் வீதியில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.

By admin