ஈரான் போர் காரணமாக எல்.பி.ஜி. தட்டுப்பாடு சூழல் ஏற்பட்ட நிலையில், எல்.பி.ஜி. விநியோகங்கள் நிலையானதாக இருக்கும் என்றும், உள்நாட்டு விநியோகம் இடையூறு இல்லாமல் தொடர்கிறது என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நாடு முழுவதும் சீரான மற்றும் சரியான நேரத்தில் சிலிண்டர் விநியோகம் உறுதிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் பீதியில் முன்பதிவு செய்வதை தவிர்க்கவும் வலியுறுத்தி உள்ளனர்.