• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

எலான் மஸ்கின் 1 டிரில்லியன் டொலர் ஊதியத் திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஒப்புதல்

Byadmin

Nov 7, 2025


டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் வரலாற்றிலேயே மிகப் பெரிய நிறுவன ஊதியத் திட்டத்திற்கு வியாழக்கிழமை அன்று பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த ஒப்புதல் மூலம், முதலீட்டாளர்கள் மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லாவை ஒரு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் ஜாம்பவானாக மாற்றுவதற்கான மஸ்கின் தொலைநோக்கு பார்வையை ஆதரித்துள்ளனர்.

இந்த முன்மொழிவு 75% க்கும் அதிகமான ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டது. ஆஸ்டின், டெக்சாஸில் உள்ள நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில், மஸ்க் நடனமாடும் ரோபோட்களுடன் மேடையில் மகிழ்ச்சியுடன் தோன்றினார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஏற்கனவே இருக்கும் எலான் மஸ்க், இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த பத்தாண்டுகளில் 1டிரில்லியன்வரையிலான பங்குகளைப் பெறவாய்ப்புள்ளது.

இருப்பினும்,கட்டாயமாகச் செலுத்தவேண்டிய கொடுப்பனவுகளுக்குப்பிறகு இந்தத் தொகுப்பின் மதிப்பு 878 பில்லியனாக குறையும்.

இந்த வாக்கெடுப்பு டெஸ்லாவின் எதிர்காலத்திற்கும் அதன் மதிப்பீட்டிற்கும் மிக முக்கியமானது. டெஸ்லாவின் நிர்வாகக் குழு, மஸ்க் இந்த ஊதியத் திட்டத்தைப் பெறவில்லை என்றால் அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறக்கூடும் என்று எச்சரித்திருந்தது.

சில முதலீட்டாளர்கள் இந்தத் தொகுப்பு நம்பமுடியாத அளவிற்கு விலை உயர்ந்தது மற்றும் தேவையற்றது என்று கருதினாலும், பல முதலீட்டாளர்கள் இது மஸ்க்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு வழி என்றும் நம்புகின்றனர்.

The post எலான் மஸ்கின் 1 டிரில்லியன் டொலர் ஊதியத் திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் appeared first on Vanakkam London.

By admin