• Fri. Oct 10th, 2025

24×7 Live News

Apdin News

எலிகளால் தொல்லையை சந்திக்கும் சென்னை; தீர்வு என்ன?

Byadmin

Oct 10, 2025


சென்னை நகரத்திற்கு பெரும் தொல்லையாக மாறுகிறதா எலிகள்? எப்படி கட்டுப்படுத்துவது?

பட மூலாதாரம், Getty Images

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஒருமுறை வீட்டின் ஃப்ரிட்ஜின் அடிப்பாகத்தை சுத்தம் செய்வதற்காக தனியே கழற்ற முயன்றபோது அவருக்கு சற்று அதிர்ச்சி காத்திருந்தது. அதில் எலி ஒன்று இருந்துள்ளது. வீட்டின் மற்ற பகுதிகளில் இருந்திருந்தால் கூட, அது அங்கே செல்வதற்கான வழி இருந்திருக்கும் என நினைக்கலாம். ஆனால், ஃப்ரிட்ஜின் அடியில் நன்கு மூடப்பட்ட பகுதியில் அது எப்படி சென்றது என்பது அவருக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

இப்படி, நீங்கள் நினைக்காத இடங்களிலெல்லாம் சிறு கண்களை உருட்டிக்கொண்டும், நாம் பிடிக்க எத்தனிக்கும்போது கண்ணிமைக்கும் நொடியில் ஓடிவிடும் இந்த எலிகள் சென்னை மாநகரின் பெரும்பாலான வீடுகளில் எங்கோ ஒளிந்துகொண்டுதான் இருக்கின்றன. சிலருக்கு எலிகள் என்றாலோ அல்லது அவை எங்காவது இறந்துகிடந்தால் ஏற்படும் நாற்றத்தையோ சகித்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல, எலிகளால் ஏற்படும் உடல்நல பிரச்னைகளும் அதிகமாக உள்ளன.

இந்த எலிகளால் ஏற்படும் முதன்மையான உடல்நல பிரச்னையாக ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ எனும் நோய் உள்ளது. இந்த நோய், ஆண்டுதோறும் சென்னை மாநகரில் சராசரியாக 500-660 பேர் என்றளவில் பாதிக்கப்படுவதாக, சென்னை மாநகராட்சியின் வெக்டர் கன்ட்ரோல் பிரிவு அதிகாரி செல்வகுமார் தெரிவித்தார். இப்பிரிவு, கொசுக்கள், பூச்சிகள், எலிகள் போன்றவை பரப்பும் நோய்களை கட்டுப்பத்துவதற்கான தனிப்பிரிவாகும்.

ஒரு நகரத்தில் ஆண்டுதோறும் நிலையாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் லெப்டோஸ்பைரோசிஸ் வழக்குகள் பதிவாகின்றன என்றால், அங்கு நிலவும் எலி தொல்லையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்றே அர்த்தம் என்கிறார் செல்வகுமார்.



By admin