• Tue. Nov 18th, 2025

24×7 Live News

Apdin News

எஸ்ஐஆர்: தமிழ்நாட்டில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? முழு விவரம்

Byadmin

Nov 18, 2025


தமிழ்நாடு, எஸ்.ஐ.ஆர், வாக்காளர் பட்டியல் திருத்தம், சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் ஆணையம்

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சியில் எஸ்.ஐ.ஆர் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆசிரியர்கள் பணியில் இல்லாத நிலையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தங்களது மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி இன்று (நவம்பர் 18) முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை வருவாய் துறை அலுவலர்கள் முழுமையாக புறக்கணித்திருப்பதாக வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. அவற்றில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது.



By admin